Friday, February 18, 2022

மதுரைகாரர்கள் அரிவாளோட தான் இருப்பாங்களா என்ன?

சன்டே அதுவுமா சி.எஸ்.கே Vs ஆர்.சி.பி மேட்ச் பார்க்குற கேப்ல ரீமோட்டை எடுத்து சும்மா சேனல் சுற்றுலா ஒண்ணு போயிக்கிட்டுயிருந்தேன்.
.
.
.
ஜீ தமிழ்ல கொடி வீரன், சன் டிவி ல கொம்பன்னு ஒரே முத்தையா அண்ணேனோட படங்கள்லாக இருக்கு.இந்த ரெண்டு படம் மற்றும் இந்த 

முத்துராமலிங்கம்,
மருது
குட்டி புலி 
போன்ற பல படங்கள் மதுரையை பெருமை படுத்துதுன்னு நீங்க நினைச்சா கண்டிப்பா இல்லைன்னு தான் சொல்வேன்.
.
.
.
.

இப்ப மட்டுமில்ல தமிழ் சினிமாவுல ஆண்டாண்டுகளாகவே மதுரைய ஒரு கலவர பூமியை போல தான் காட்சிபடுத்திக்கிட்டு வர்றாங்க.

கே.ஜி.எப் இன்ட்ரவல் ப்ளாக்குல கருடன் வர்றப்ப வேலைகாரனுங்க, டிரைவர்,கட்சி காரனுங்கன்னு எல்லாரும் துப்பாக்கிய எடுத்து நீட்டுவானுங்க அந்த மாதிரி மதுரையுல எல்லாரும் அரிவா ,கத்தியோட எடுத்து நீட்டுவானுங்க போல தான்னு நானும் நெனைச்சுக்கிட்டு இருந்தேன் 2014 வரைக்குமே.

.
.
.
ஏன்னா 2014 ல தான் நான் முதன்முறையா மதுரைக்கு போறேன் .குஜராத் மாடல்னு சொல்லி இந்தியாவையே ஏமாத்துன மாதிரி மதுரைன்னா இப்டி தான் Raw வா இருக்கும்னு  இத்தன  வருஷமா தமிழ் சினிமா நம்பள ஏமாத்தி வச்சிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
.
.
.
நான் பார்த்த வரைக்கும் பேச்சுல தெனவாட்டு தெரிஞ்சாலும் தெரியாத முகத்துக்கு கூட உதவி செய்யுற மனசு மதுரக்காரங்களுக்கு இயல்பாகவே இருக்கு..
மதுரைக்குன்னு ஒரு எதார்த்த அழகியல் இருக்கு. அத கரெக்ட்டா குள்ள நரி கூட்டத்துல காமிச்சிருப்பாங்க.

.
.
.
.

முத்தையா படங்கள்ல வர்ற மதுரை சார்ந்த ஹீரோக்கள் 

மூட்டை தூக்குவது;

முழு நேர கட்டபஞ்சாயத்து ;

சும்மாவே திண்ணையில் தூங்குவது போன்ற வேலைகளை தான் பிராதனமா பண்ணுறார்..
இல்ல வாய்தாவுக்காக கோர்ட் வாசலில் நிற்கிறார்.!

முட்டை தூக்குறது என்ன கேவலமா போச்சா என தூக்கிட்டு வர வேணாம்.படிச்ச ஒருத்தனை கதாநாயகனா காட்டுனா அது பார்க்குறவங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டா அமையும் நாமளும் படிக்கனும்னு.

.
..
.

எனக்கு இருக்க முக்காவாசி ஃப்ரண்ட்ஸ் மதுரக்காரனுங்க தான்.அதுல 
நிறைய 

டாக்டர்ஸ் இருக்கானுங்க,

நிறைய பிஎச்டி ஸ்காலர்ஸ் இருக்கானுங்க,

நிறைய ஐ.டி டியூட்ஸ் இருக்கானுங்க.

வெளிநாட்டுல பெரிய வேலையுல நிறைய பேர் இருக்கானுங்க..

இது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா முத்தையா டியூட்.

எல்லா படத்துலையுமே ஹீரோ அநியாத்தை தட்டி கேட்கும் நபராக சட்டத்தை தன் கையில் எடுக்கிறார் அவர் சட்டம் பயின்றவராக இருந்தாலும் கூட!
ஏன்பா பா.ரஞ்சித்,மாரி செல்வராஜ்ன்னு அவங்களுக்கு ஒரு டிரைக்டர் இருக்குறப்போ எங்களுக்கு முத்தையா போல ஒரு டிரைக்டர் இருக்க கூடாதுன்னு கேட்குறீங்க...
.
.
.
.

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படத்துல உங்க அவமானப்படுத்துறதா நீங்களே நினைச்சுக்குறத விட அதிக அளவு ஒரு மோசமான பிம்பத்தை முத்தையா அன் கோ போன்ற டிரைக்டர்ஸ் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.
சீக்கிரம் அத முதல்ல எதிர்த்து பேசுங்க மை டியர் மதுரை ஃப்ரண்ட்ஸ்.

                        - போலிகவிஞன் (25/4/21)

எங்கள் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்

ஒரு கட்டுரைய எப்டி ஸ்டார்ட் பண்றதுன்னு இன்னும் ஒரு தெளிவில்லாமலையே இத எழுத ஸ்டார்ட் பண்றேன்.....தெளிவில்லாதது தொடக்கத்துல தான் மையக்கருல இல்ல!
.
.
.
.
ஃபேஸ்புக் யூஸ் பண்றவங்க ப்ரொஃபைல்குள்ள போய் எந்த ஸ்கூல், காலேஜ்ல படிச்சாங்கன்னு பார்த்தா முக்காவாசிக்கு மேல தூய, புனித ங்குற பேர்ல ஆரம்பிக்குற கிரிஸ்டியன் இன்ஸ்ட்டிடீயுசன்ல தான் படிச்சிருப்போம். எனக்கு தெரிஞ்சு எந்த ஸ்கூல்,காலேஜ்களிலும் ஒரு மதத்துக்கு மட்டும் ஆதரவா நடந்துக்கிட்டதில்லை..
.
.
.
.
உதாரணத்துக்கு எங்க ஊர்ல நான் படிச்ச ரெண்டு ஸ்கூலுமே கிருஸ்தவ பள்ளி தான்.அதுலையும் ஆண்டனிஸ் ஸ்கூல்ல வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த தனியா ஆடிட்டோரியமே இருக்கும்.
நானும் தினுமும் திருநீர் வச்சிட்டு தான் ஸ்கூலுக்கு போவேன்.எங்க ஸ்கூல்ல இருக்க அந்த அந்தோணியார் பள்ளிங்குறது வெறும் பேர் தான் அசோக், அக்பர் போல.வெறும் பேரா தான் நாங்க பார்த்தோம், பார்க்கவும் சொல்லி கொடுத்திருக்காங்க.
.
.
.
.
திருத்துறைப்பூண்டியில பிறந்திருந்தா St.theresas school ல கண்டிப்பா ப்ரைமரி க்ளாஸ்லையோ, ஹையர் செகண்ட்ரிலியோ படிச்ச ஒரு பிள்ளைங்களாச்சும் எங்க ஒவ்வொருத்தங்க வீட்டுலையும் இருப்பாங்க. இவ்ளோ ஏன் எங்க அம்மா,  அக்கா முதகொண்டு என்னோட க்ரஷ் வரைக்கும் எல்லாரும் படிச்சது, படிச்சிட்டு இருக்கது தெரசாஸ்ல தான்.
.
.
.
எங்களை கட்டாயப்படுத்திருக்காங்க இந்த பள்ளிகள்ல பலமுறை....

ஒழுங்கா படிக்க சொல்லி....
ஒழுக்கமா படிக்க சொல்லி.....
மதவெறி பிடிச்சவனாக இருக்காதேன்னு சொல்லி......
ஆனா இந்த மாதிரி கட்டாயப்படுத்துதல் கட்டாயம் தேவை தானே.

இப்ப என்ன சொல்ல வந்தேன்னா எங்க ஊர்ல மட்டுமில்ல ஒட்டு மொத்த தமிழ்நாட்டுலையும் ஏன் இந்தியாவுல கூட தலைமுறை தலைமுறையா படிக்க வச்சு முன்னேத்துனது இந்த மாதிரி கிறிஸ்டியன் இன்ஸ்ட்டிடீயுசன் தான். 

அவங்க மேல சும்மா பொத்தம் பொதுவா ஒரு பழிய தூக்கி போட்டுட்டு போயிட்டு இருக்கானுங்க.இந்த பள்ளி , கல்லூரிகள்ல படிச்ச நீங்களே அமைதியா இருந்தா நாளைக்கு கர்நாடகாவுல நடந்த மாதிரி நம்ப பிள்ளைங்களும் காவி துண்ட போட்டுக்கிட்டு கலவரம் பண்ணிட்டு நிப்பான்.

கல்விய கொடுத்து மதமாத்துறாங்கன்னு கதரும் தேசியவாதிகளே. நீங்கள் ஏன் இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள் திறந்து படிக்க வைக்க கூடாது. என்றும் இத செய்ய மாட்டீங்க ஏன்னா நமக்கு தேவை கல்வியாளர்கள் அல்ல கலவரகாரர்களே!

#Sanghis_are_injurious_to_humans
                      
     - போலி கவிஞன்