Friday, June 11, 2021

மீடியா செய்வது சரியா?

"ஏ வேசி ஊடகமே!!"
.
.
.

"ஏய் மானங்கெட்ட ஊடகமே!!!"
.
..
.
"பொதிகையில் செய்தி பார்த்த காலங்கள் என்ன அலாதி"யானவை தெரியுமா என பல கொரோனா காலத்து ஃபேஸ்புக் போராளிகள் பதிவிட்டு வருகின்றனர் தொடர்ந்து.
.
.
.
#அண்டா__திருட்டு__முதல்____அண்டார்டிக்காவரை:

ஊடகத்தின் பிரதானமான வேலை நியூஸ் ப்ரேக் பண்றது தான்.அந்த நியூஸ் நல்ல செய்தியாவோ கெட்ட செய்தியாவோ இருக்குறது அவங்க கையில இல்ல.

"புயல் காரணத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதும் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு"ங்குறது மட்டும் செய்தி இல்லை.அமேசன்ல வர காட்டு தீ முதற்கொண்டு  ஆண்டிப்பட்டில யாரோ ரெண்டு பேருக்கு இடையில நடக்குற வேலி தகராறு வரை எல்லாமே நியூஸ் தான்.அதுல உங்களுக்கு எது முக்கியமோ அத எடுத்துக்கோங்க.
.
.
.

#அமைதி_பூங்காவாம்_தமிழகம்:

முன்னாடி பொதிகை இருந்த காலத்துல அவனுங்க சொல்ற அந்த அரைமணிநேரம் மட்டும் தான் செய்தியா?அதை தாண்டி வேற எதுவுமே உலகத்துல நடக்கலையா?இன்னைக்கு சூழ்நிலையில ஒரு செய்தி பலதரப்பட்ட கோணங்கள்ல பரப்ப படுது. 

அதுல உண்மை எல்லார்கிட்டையும் போய் சேர்ற நல்லதும் இருக்கும் ஒரு தரப்பு நியாயம் மட்டுமே போய் சேர்ற கெட்டதும் இருக்கு.
ஆனா பொதிகை இருந்த காலத்துல அரசுக்கு எதிரா எந்த கருத்தாச்சும் சொல்லி நியூஸ் வெளியிட்ற முடியுமா?
(இப்புவுள்ள செய்தி நிறுவனங்களை கட்சிகள் கைக்குள் போட்டு கொண்டது வேற கதை)
.
.
.

#புடிச்சது_எடுத்துக்கோ:

விதவிதமா ரகரகமா பிரிச்சு பிரிச்சு நியூஸ் போடுறானுங்க
விளையாட்டு,
சினிமா,
அரசியல்,
க்ரைம்,
உள்ளூர்,
வெளிமாநிலம்,
வெளிநாடு ,
ஏன் விண்வெளின்னு ஸ்லாட்டு ஒதுக்கி நியூஸ் போடுறானுங்க.

"ஒரு நடிகையின் நாய்க்கு காய்ச்சல்"ங்குற செய்தி ரொம்ப முக்கியமா ப்ரோன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது தல.விண்வெளிக்கு நாய ராக்கெட்ல வச்சு அனுப்பினா கூட அதே ஊடகத்துல தான் ப்ரோ வருது.

"கள்ளத்தொடர்பு, கள்ளக்காதல் "செய்தி அதிகமா போடுறாங்கன்னு ஒரு குறிப்பிட்ட சேனலை  கலாய்க்குறதுண்டு ஆனா டி.ஆர்.பி ல அது தான் நம்பர் ஒன் நியூஸ் சேனல்.அப்ப நம்ப மேலையும் தான தப்பு இருக்கு.
.
.
.

#ப்ரேக்_King_News:

இப்ப கூட Spb சாவுக்காக காத்திருக்கானுங்க பாரு வெட்கமேயில்லாம என கீழே உள்ள புகைப்படத்தை பல Intellectual அறிஞர்கள் பகிர்ந்துள்ளனர்.Spb உடல்நிலை சரியில்லைன்னும் இந்த மீடியாவுல தான் வந்திச்சு.....அவருக்காக பலர் பிரார்த்தனை பண்ணியதும் இதே மீடியால தான் வந்திச்சு.....இப்ப அவர் தவறிய செய்தியும் இதே மீடியாவுல தான் வந்திச்சு..

இப்ப அத்தனை மக்களுமே Spb இறந்த செய்தியை அறிந்தவுடனே நியூஸ் சேனலுக்கு தான் போவாங்க அவர பத்தி செய்திய பார்க்க.

அந்த நேரம் நியூஸ் சேனல் Spb பத்தி போடாம அத விட முக்கியமான எந்த செய்தியை போட்டாலும் ,"என்னடா நியூஸ் போடுறானுங்க ச்சை....அங்க ஒரு மனுஷன் இறந்தத பத்தி கூட அப்டேட் இல்லை இவனுங்க என்னடா நியூஸ் சேனல் நடத்துறானுங்க அடுத்த சேனலுக்கு தாவிடுவான்".இங்க நியூஸ் சொல்றது ஒரு சேனலுக்கு எவ்ளோ முக்கியமோ அந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள தக்க வச்சிக்குறதும் முக்கியம். 
.
.
.

#ஓடிஓடி_உழைக்கும்_ஊழியன்_ஊடகன்:

அதுக்காக ஊடக அறத்தை  எந்த சேனலும் மீறுவதில்லைன்னு நான் சொல்லவரலை.பொதிகை எப்படி அரசின் நலம்விரும்பியோ அதைப்போல மற்ற சேனல்களும் சில சமயங்களில் சிலரின் நலம்விரும்பிகளாக தான் இருக்க செய்கிறது.அதற்காக பொத்தம்பொதுவாக மீடியாவே இப்டி தான் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்,
ஸ்டெர்லைட் போராட்டங்கள் ஆகட்டும்
கஜா, ஒக்கி புயலாகட்டும்,
இன்றைய கொரோனா நிலவரம் வரை நம்மை தேடி செய்திகள் வருவதற்காக செய்திகளை தேடி பரபரத்து பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் சொல்லும் இதே வேசி ஊடககாரர்கள் தான்.

.
.

#மனுஷாள்_யாருக்கும்_இறக்கமில்லை:

வீட்டில் நன்றாக உட்கார்ந்து கொண்டு மத்தியான சாப்பாட்ட சாப்பிட்டு மல்லாக்க படுத்துக்கொண்டு  கருத்து கூறியே ஆக வேண்டும் என்பதற்காக கண்டதை உலரவேண்டாம்.

உங்கள் பிரச்சனை அவர்கள் உண்மை செய்தியை கூறவில்லை என்பதா இல்லை உங்களுக்கு ஆதரவாக கூறவில்லை என்பதா? 
.
.
.
-#போலிகவிஞன்

No comments:

Post a Comment